தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  நாம் மக்களை சந்திக்கின்ற கூட்டம் ஆரம்பமாகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இந்த இயக்கம் தான் நாளைய தமிழகத்தினுடைய தலைவிதியை நிர்ணயிக்க போகின்ற இயக்கம் என்பதை நாம் நிரூபிக்கின்ற கூட்டமாக அந்த கூட்டம் அமையும். இதைத்தான் மக்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். எங்கே போனாலும் எப்ப கூட்டம் நடத்த போறீங்க ? எப்போ கூட்டம் நடத்த போறீங்க ? அப்படித்தான் கேக்குறாங்க .

அவங்க மாநாடு நமக்கு சும்மா.நம்முடைய கழக அமைப்பு ரீதியான மாவட்டங்கள்  மொத்தம் 88 மாவட்டங்கள் இருக்குது. அதுல 18மாவட்டங்களுக்கு நாம் திருச்சியில் கூட்டம் நடத்தினோம். இன்னும்  70 மாவட்டங்களுக்கு இன்னும் கூட்டம் நடத்தல. 18 மாவட்டங்களுக்கு நடத்திய கூட்டத்திற்கு அரை பங்கு கூட கூட்டம் இல்ல மதுரையில் அவர்கள் நடத்திய கூட்டம் இல்லை. இது தேவையா ? 2011-இல் மாண்புமிகு அம்மா அவர்கள் கோயம்புத்தூரில் மாநாடு நடத்துனாங்க..

திருச்சியில் நடத்துனாங்க, மதுரையில் நடத்துனாங்க,  ஒன்றையொன்று மிஞ்சும் அளவிற்கு அந்த கூட்டம் இருந்தது. அதே எழுச்சியான கூட்டம் நாம் திருச்சியில் நடத்தி காட்டினோம். தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று. இதுதான் உண்மையான அண்ணா திமுக. நாம் தான் உண்மையான அண்ணா திமுக என்பதை வருகின்ற காலத்தில் நாம் நிரூபித்துக் காட்டுகின்ற நிலையை  நீங்கள் தான் உருவாக்கணும் என தெரிவித்தார்.