ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், ஒரு முறை அம்மா அவர்கள் என்னை அழைத்து சொன்னார்கள். எப்பொழுது ? 2001லே 23 வருடங்களுக்கு முன்பே சொன்னார்.முனுசாமி நடிகர்… அவரை நம்பி…  அவர் பின்னால் செல்ல கூடாது. அப்படி சென்றால் அவரை வைத்து கட்சி ஆரம்பிச்சிக்கோ என்று சொன்னார்கள். 2001ல் அந்த கருத்தை அம்மா சொன்னார்கள்.

2004லே வலியுறுத்தி சொன்னார்கள். இதெல்லாம் அண்ணனுக்கு தெரியும். எப்படிப்பட்டவர் அவர் ? எப்படி நடிப்பார் ? எப்படி நடித்து காலை பிடிப்பார் ?  என்பதெல்லாம் அவருக்கு தெரியும் என தெரிந்திருந்தும் அவர் இந்த அளவுக்கு வருவதற்கு காரணமாக இருந்துவிட்டு… 

அவரால் பதவியைப் பெற்று…  அவரால் பதவி பெற்ற காரணத்தினால்…  இன்று பணத்தை எடப்பாடி மூலமாக ஒவ்வொரு மாதமாக வசூல் செய்து கொண்டு,  சென்னையிலே அமர்ந்து கொண்டு அந்த துறையின் மூலமாக அண்ணனிடம் இருந்த ஹவுசிங் போர்ட் துறையை முழுமையாக பயன்படுத்தி வந்தவர்  கே.பி முனுசாமி.

இப்படி அனுபவித்தவர்கள் எல்லாம் அங்கு அமர்ந்து கொண்டு சிந்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் எந்த பதவியும் பார்க்கவில்லை,  எந்த சுகத்தையும் பார்க்கவில்லை.அம்மா இருந்தபோதும் இல்லை…. அண்ணன் அமைச்சராக இருந்த பொழுது… எடப்பாடி முதலமைச்சராக இருந்த காலத்தில்  கூட ஒரு பைசாவை கூட தொட்டுப் பார்க்காதவர்கள் அமர்ந்து,  ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்.  மாபெரும் ஆர்ப்பாட்டம் என தெரிவித்தார்.