தலித் திருமண விழாவில் விலை உயர்ந்த பைக் பரிசு வழங்கியதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மணமகள் குடும்பத்தினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த ரிஷி-சீலா தேவி தம்பதியினர் மகள் கவிதாவிற்கு திருமணம் நடைபெற்றது. தலித் சமூகத்தை சேர்ந்த இந்த குடும்பத்தினரின் திருமண விழாவின்போது மணமக்களுக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் உள்ள உயர் சமூகத்தினர் மணப்பெண்ணின் பெற்றோரை மிரட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் ரிஷி-ஷீலா தேவி தம்பதியினர் திருமண விழாவிற்கு பாதுகாப்பு கேட்டு உள்ளூர் போலீசில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் உள்ளூர் கிராம தலைவர், உயர் ஜாதி குடும்பங்கள் செய்வது போல் கூடாது என்று தங்களை மிரட்டியதாகவும் மீறினால் திருமண ஊர்வலத்தின் போது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெறும் என எச்சரித்ததாக குறிப்பிட்டு இருந்தன. அதை தொடர்ந்து காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டது.