தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஆதிப்ருஷ் மற்றும் ப்ராஜெக்ட் கே போன்ற திரைப்படங்களிலும் பிரபாஸ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னதாக சலார் படப்பிடிப்பின் போது பிரபாஸுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் நடிகர் பிரபாஸுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் பிரபாஸ் ஓய்வில்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.