மலையாள சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தவர் என்.பி பிரபாகரன் (75). இவர் கந்தவராத்திரி, அழகனந்தா, அன்பற அச்சம்மா, அவள் திரௌபதி மற்றும் அனுயாத்ரா போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சக பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள் பிரபாகரனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன் பிறகு அவருடைய உடல் சொந்த ஊரான திருவஞ்சூருக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேலும் இவரின் மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.