சென்னை சாலி கிராமம் விஜயராகவபுரத்திலுள்ள சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர். இந்த கட்டிடத்தை கட்ட மாநகராட்சியில் உரிய அனுமதி பெறவில்லை என சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட டப்பிங் யூனியன் கட்டிடத்தை திறக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி அதிகாரிகள் சீல் வைத்தனர். டப்பிங் சங்கத்துக்கு நான் தலைவராக இருப்பதால் சிலருக்கு பொறாமை. அதன் விளைவாகவே இப்படி நடக்கிறது என்று அவர் கூறினார்.