தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் ராவணன் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடித்ததில் விக்ரம் மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தற்போது சியான் விக்ரம் பற்றி தான் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பேசி வருகிறார்கள்.

அதாவது நடிகை திரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் தங்களுடைய பெயர்களை குந்தவை மற்றும் அருண்மொழிவர்மன் என மாற்றியதால் அவர்களுடைய ப்ளு டிக் பறிபோனது. இதனால் அவர்கள் மீண்டும் பழைய பெயர்களை மாற்றினார்கள். தற்போது அவர்களுக்கு ப்ளூ டிக் வந்த நிலையில் நடிகர் விக்ரமின் ப்ளூ டிக் மட்டும் இன்னும் ட்விட்டரில் வரவில்லை. அதாவது சந்தா கட்டாத பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும் சந்தா கட்டியதால் ப்ளு டிக் வந்தது. ஆனால் நடிகர் விக்ரமின் ப்ளூ டிக் மட்டும் இதுவரை வராததால் அவர் இன்னும் சந்தா கட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் விக்ரமின் ப்ளூ டிக்கை எப்பயா திரும்பத் தரப் போறீங்க என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.