மணிரத்னம் டைரக்டில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் பொன்னியின் செல்வன். கடந்த வருடமே இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகியது. நாளை ஏப்ரல் 28 இப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகும். இந்நிலையில் பெங்களூரில் நடந்த இந்த படத்தின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா போன்றோர் பங்கேற்றனர்.

இதில் நடிகர் ஜெயம் ரவி கலந்துகொண்டு பேசியதாவது, “படங்களில் நல்லவன் கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்புவது இல்லை. ஏனெனில் அதில் ஒரே மாதிரியான நடிப்பைத் தான் வெளிப்படுத்த முடியும். ஆனால் வில்லன் கதாபாத்திரம் அப்படி இல்லை. கெட்டவனாக நடிக்கும் போது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்த இயலும்” என்று அவர் தெரிவித்தார்.