தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் “சாகுந்தலம்”. குணசேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கியமான வேடமேற்றுள்ளார். மேலும் அதிதிபாலன், கவுதமி, மதுபாலா, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், அனன்யா நாகல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படமானது வசூல் ரீதியாக பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

இந்நிலையில் நடிகை மதுபாலா அளித்த பேட்டியில் “பாக்ஸ் ஆபீஸில் சாகுந்தலம் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பது தனக்கு மனதளவில் வேதனை ஏற்பட்டுள்ளது. சாகுந்தலம் படத்துக்காக இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதிக உழைப்பை கொடுத்தனர். சாகுந்தலம் ஒரு வலுவான தென் இந்திய அம்சங்களை கொண்ட கற்பனையான விஷயங்கள் நிறைந்த படம். ஒவ்வொருவரும் இப்படத்திற்காக உண்மையாக உழைத்தனர். இதனால் படத்தின் தோல்வி வேதனையை ஏற்படுத்துகிறது” என அவர் கூறியுள்ளார்.