அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,  இபிஎஸ்ஸுடன் இனி இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். இபிஎசுடன் இருப்பவர்கள் உடலில் ஓடுவது துரோக இரத்தம். நம்முடன் இருப்பவர்கள் உடலில் ஓடுவது விசுவாச ரத்தம் எனக் கூறிய டிடிவி தினகரன்,  டெண்டர் நபர்களால் உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இபிஎஸ்ஐ வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள் என சூளுரைத்தார்.