சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு,  அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு அது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சென்னையில் மட்டும் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் 4 லட்சத்து 90 ஆயிரம் பேர் இதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள்.

காஞ்சிபுரத்தில் 29 ஆயிரம் பேர், செங்கல்பட்டில் 14 ஆயிரம் பேர், திருவள்ளுர் மாவட்டத்தில் 22 பேரும்  விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த நான்கு மாவட்டங்களிலும் 17ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் 5.5  லட்சம் பேர் ரேஷன் கார்ட் இல்லாதவர்கள்  விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியாகி உள்ளது.