தமிழக சட்டசபையில் பேசிய ஹிந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு,  ஒரு மனிதனுக்கு சசிஸ்டர்பூஜை என்பது 60 ஆண்டுகள் நிறைந்து, மத நம்பிக்கை இருபவர்கள், தெய்வ நம்பிக்கை இருப்பவர்கள், அவர்கள் வழிபடுவது அவர்கள் தனிப்பட்ட உரிமை.

அதற்காக நீங்கள் சொல்லுகின்ற சனாதனத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்பது அல்ல,  நாங்கள் இந்துக்களை ஏற்றுக்கொள்கிறோம்,  இந்து கடவுள்களை ஏற்றுக்கொள்கிறோம். இந்துக்கள் வழிபடுகின்ற ஆலயங்களை மேம்படுத்தி தருகின்றோம். ஆகவே ,நாங்கள் சசிஷ்ட பூஜை செய்ததால்,  நீங்கள் மறுக்கின்ற பெண் கல்வி உரிமையை எந்நாளும் எதிர்ப்போம்.

நீங்கள் மறுக்கின்ற…. ஏற்றுக்கொள்கின்ற…..  உடன்கட்டை ஏறுதலை எந்நாளும் எதிர்ப்போம். நீங்கள் ஏற்றுக்கொள்ளுகின்ற குல கல்வியை எந்நாளும் எதிர்ப்போம். ஆனால் இந்துக்களை நாங்கள் முழுவதுமாக ஏற்றுக்கொள்வோம் என்று இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன் என பேசினார்.