திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பழைய தாராபுரம் சாலையில் சாமி தியேட்டர் அமைந்துள்ளது. இந்த தியேட்டருக்கு அருகே வெள்ளைச்சாமி என்பவர் வாழைப்பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அதே பகுதியைச் சேர்ந்த குழந்தை இயேசு மற்றும் சக்தி என்ற வாலிபர்கள் அருகில் இருக்கும் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த வெள்ளை சாமியிடம் தகராறு செய்தனர். மேலும் அவர்கள் வெள்ளைச்சாமியை விறகு கட்டையால் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த வெள்ளைச்சாமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தை இயேசு மற்றும் சக்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் வெள்ளைச்சாமியை தாக்கிய சிசிடிவி கட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.