செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அம்மணம் பாகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அவர்கள் பயணித்த வேன் நேற்று காலை 3 மணிக்கு திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மீனாட்சி நாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்றது. இதே போல ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு பேருந்து மூலம் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்த வேன் முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் வெனின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் வேனில் இருந்த 23 ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.