நாமக்கல் மாவட்டத்திலுள்ள முள்ளுக்குறிச்சி பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஹரிஹரன் தனது மனைவியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த லட்சுமி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் லட்சுமியின் பெற்றோர் ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதற்கிடையே சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் லட்சுமியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹரிஹரனிடம் கூறியுள்ளனர். இதனால் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ஹரிஹரன் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த ஹரிஹரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.