தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பவளந்தூர் பகுதியில் கௌரிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியை அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சக்திவேல் என்பவர் தவறான சைகை மூலம் கேலி செய்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கௌரிசங்கர் சக்தி வேலை தட்டி கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த சக்திவேலும் அவரது குடும்பத்தினரும் இணைந்து கௌரிசங்கரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கௌரிசங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சக்திவேல், அவரது மனைவி சுஜி, தாய் பழனியம்மாள், தந்தை பெருமாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.