தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடூரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கோபமடைந்த பொதுமக்கள் அரூர்- பொம்மிடி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.