சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு பகுதியில் பழைய கடலோரம் மீன் சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் சிறிய வகையில் கடைகள் அமைத்து மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த பகுதியில் கருவாடு காய வைக்கும் இடத்தில் வேலை பார்த்த வட மாநில வாலிபர் ஒருவர் நேற்று அதிகாலை 2 பெண்களிடம் ஆபாசமாக பேசி அத்துமீறலில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதனை தொடர்ந்து விடிந்தவுடன் அங்கு வந்த வாலிபரை மீனவ பெண்கள் இருவரும் துடைப்பம், பிளாஸ்டிக் குழாய் ஆகியவற்றால் ஓட ஓட விரட்டி தர்ம அடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் அந்த வாலிபர் மீன் வெட்டி கொண்டிருந்த ஒருவரது கத்தியை எடுத்து மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.