சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஏற்காட்டில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனத்தை இயக்கியுள்ளனர். அவ்வபோது சாரல் மழையும் பெய்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனையடுத்து தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால் எஸ்டேட் மற்றும் கட்டிட வேலைகள் நிறுத்தப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் மலைப்பாதையில் சென்ற வாகனங்கள் மெதுவாக சென்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.