விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பலர் பணத்தை இழந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் போலீசார் 22 புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து மோசடி செய்யப்பட்ட 12 லட்சத்து 1782 ரூபாய் பணத்தை போலீசார் பத்திரமாக மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். விரைந்து செயல்பட்டு பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பாராட்டியுள்ளார்.