வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி என்ற பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஒவ்வொரு மாதமும் தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ரஜினி தலைமையில் மேல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நித்தியானந்தம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனுசுயா ரமேஷ் மற்றும் குழு உறுப்பினர்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.  இதனையடுத்து பள்ளியின் முன்னாள் மாணவர்கள் குமார் அய்யர் மற்றும் பெருமாள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டார்கள். இவர்கள் இருவரும் பள்ளி வகுப்பறை வெளிப்புற சுவர்களில் ஓவியம் வரைவதற்கு ரூ.50 ஆயிரம் நிதியளித்ததால் இந்த சிறப்பு செய்யப்பட்டது.

மேலும் இக்கூட்டத்திற்கு ஆசிரிய பயிற்றுனர் லெனின், எஸ்.எம்.சி.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜினிகாந்த் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை கண்டறிந்து அவர்களையும்  பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை எடுத்தல். மேலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஊக்குவிப்பது ஆகியவை பற்றி விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த மேலாண்மை குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.