தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமையில் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கணினி பயன்பாட்டியல் துறை 3-ஆம் ஆண்டு மாணவி சுபாஷ்னி சிறப்பு விருந்தினரான ஏன்ஜலினா ரஞ்சிதமணியை வரவேற்றார். இதனையடுத்து “ஸ்வயம் தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட கற்றல் தேசிய திட்டத்தில் இணையவழி பாடங்கள் பற்றிய விழிப்புணர்வு” என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் பேசினார்.

இந்த பேரவை கூட்டத்தில் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அனிதா மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் முடிவில் மாணவி ரேணுகா நன்றியுரை கூறினார். மேலும் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியும் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர். 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இந்த முகாமை கல்லூரி முதல்வர் ஜெயந்தி வழிகாட்டுதலின்படி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மேலும் இந்த முகாமை சிறப்பாக நடத்திய கல்லூரியையும், ரத்ததானம் செய்த மாணவிகளையும் பாராட்டி, திருச்செந்தூர் தலைமை டாக்டர் பொன்ரவி, ரத்த வங்கி டாக்டர் சசிகலா ஆகியோர் ரத்ததான தின பாராட்டு சான்றிதழை வழங்கினார்கள்.