வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் துர்க்கைநகர் பகுதியில்  வசித்த பன்னீரின் மகன் அரவிந்தன் (21) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆலடியாரின் மகன் ராஜலிங்கம் (21). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் மோட்டார் சைக்கிளில் இருவரும் வெளியில் புறப்பட்டு, குடியாத்தம் ரெயில் நிலையத்திற்கு அருகே உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்று  பெட்ரோல் போட்டு, பின் மெயின் ரோட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது வேலூரில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று அங்குள்ள ரெயில்வே மேம்பாலத்தின் வேகமாக கீழே இறங்கும் போது, சாலையை கடக்க முயன்ற பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பைக்கில் இருந்த ராஜலிங்கம், அரவிந்தன் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின் அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, ராஜலிங்கம் நேற்று காலையில்  பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.