சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சக்தி கணபதி நகரில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஓய்வெடுப்பதற்காக சத்தியமூர்த்தி அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பணிமனை ஓய்வறைக்கு சென்று தூங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சக டிரைவர்கள் அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தனர்.

ஆனால் இரவு நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் சக ஓட்டுனர்கள் அவரை எழுப்பியுள்ளனர். அப்போதுதான் சத்தியமூர்த்தி இருந்தது தெரியவந்தது. தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சத்தியமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.