தமிழில் முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இதையடுத்து தளபதி விஜய் ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பூஜா ஹெக்டேவுக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ரூபாய்.2 கோடி காரை பரிசாக கொடுத்ததாகவும், அந்த காரிலேயே படப்பிடிப்புகளுக்கு செல்கிறார் எனவும் சமூகவலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதனால் பூஜா ஹெக்டேவுக்கு விலையுயர்ந்த காரை எதற்கு பரிசாக கொடுத்தார் என கேள்வி எழுந்தது. அதற்கு பூஜா ஹெக்டே கூறியதாவது “என்னை பற்றி தொடர்ந்து தவறான வதந்திகள் பரவி வருகிறது. நான் தயாரிப்பாளரிடமிருந்து காரை பரிசாக பெற்றேன் என்பதும் வதந்தி தான். என் பெற்றோர்கூட இதனை பார்த்துவிட்டு கார் பரிசாக வாங்கியது உண்மையா என கேட்டனர். இவ்வாறு எனக்கு எதிராக வரும் ஒவ்வொரு தவறான வதந்திகளுக்கும் தன்னால் பதில் கூறிகொண்டு இருக்க முடியாது” என்று அவர் கூறினார்.