தற்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், படம் பெரும் வெற்றி கண்டது.

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்-1’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், இதே சூட்டோடு ‘பொன்னியின் செல்வன்-2’ படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ‘PS-2’ பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட குந்தவையிடம் திருமணம் எப்போது என்று தொகுப்பாளர் கேட்ட போது, உடனடியாக, “ரசிகர்களுக்காக நல்ல படங்களில் நடித்து வருகிறேன். தற்போதைக்கு திருமணம் பற்றி பேச வேண்டாமே” என பதில் அளித்தார். இதன் மூலம் தனது திருமணம் குறித்த தொடர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.