மே 6 கிரிகோரியன் ஆண்டின் 126 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 127 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 239 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1527 – எசுப்பானிய, செருமனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். சுவீடனின் 147 படையினர் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர். இது ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால முடிவு என சிலர் கருதுகின்றனர்.

1536 – இன்கா படைகள் குசுக்கோ நகரை எசுப்பானியரிடம் இருந்து கைப்பற்ற அதனை முற்றுகையிட்டனர்.

1536 – இங்கிலாந்தின் அனைத்துக் கிறித்தவ ஆலயங்களிலும் ஆங்கில மொழி திருவிவிலியம் கட்டாயமாக வைத்திருக்கப்பட வேண்டும் என எட்டாம் என்றி அரசர் கட்டளையிட்டார்.

1542 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துகேய இந்தியாவின் அக்காலத்தையத் தலைநகரான பழைய கோவாவை அடைந்தார்.

1659 – பிரித்தானிய இராணுவத்தின் ஒரு பகுதியினர் ரிச்சார்ட் குரொம்வெல்லை பொதுநலவாயத்தின் காப்பரசின் தலைவர் பதவியில் இருந்து அகற்றி ரம்ப் நாடாளுமன்ரத்தை மீண்டும் நிறுவினர்.

1682 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் தனது கோட்டையை வெர்சாய் அரண்மனைக்கு மாற்றினார்.

1757 – ஏழாண்டுப் போர்: பிரெடெரிக் தலைமையிலான புருசிய இராணுவம் பிராகா நகரில் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்தது.

1757 – பர்மிய உள்நாட்டுப் போர் (1740–1757) முடிவுக்கு வந்தது.

1782 – சியாம் மன்னர் முதலாம் இராமாவின் அறிவுறுத்தலின் பேரில் பெரிய அரண்மனையின் கட்டுமானப் பணிகள் பேங்காக் நகரில் ஆரம்பமாயின.

1840 – பென்னி பிளாக் அஞ்சல் தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

1853 – “த லிட்டரறி மிரர்” என்னும் ஆங்கில மாதிகையை யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார்.[1]

1854 – இந்தியாவில் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

1857 – பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சா அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது.

1882 – சீனத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதிக்கும் சட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.

1889 – ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.

1910 – ஐந்தாம் ஜோர்ஜ் அவரது தந்தை ஏழாம் எட்வேர்டின் இறப்பை அடுத்து ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினார்.

1916 – 21 லெபனான் தேசியவாதிகள் பெய்ரூட்டில் தூக்கிலிடப்பட்டனர்.

1916 – பிரெஞ்சு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வியட்நாம் பேரரசர் தூய் தான் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் ரீயூனியன் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

1937 – இன்டன்பர்க் பேரிடர்: செருமனியின் இன்டன்பேர்க் என்ற வான்கப்பல் லேக்கேர்சுடு, நியூ செர்சியில் தீப்பிடித்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் நிலை கொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படைகள் சப்பானிடம் சரணடைந்தன.

1945 – இரண்டாம் உலகப் போர்: கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராகா நகரில் ஆரம்பமானது.

1954 – ரோஜர் பேனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் கடந்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1960 – வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இருந்து முதல் தடவையாக அரச திருமணம் ஒன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இளவரசி மார்கரெட், அந்தனி ஆர்ம்ஸ்ட்ரோங்-யோன்சு ஆகியோரின் திருமணத்தை 20 மில்லியன் பேர் கண்டுகளித்தனர்.

1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முசுலிம் குடியரசுத் தலைவரானார்.

1975 – 100,000 ஆர்மீனியர் பெய்ரூட்டில் நடந்த ஆர்மீனிய இனப்படுகொலையின் 60-வது நினைவுநாள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1976 – இத்தாலியில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் 900-978 பேர் உயிரிழந்தனர்.

1984 – சியோல் நகரில் 103 கொரிய மாவீரர்களை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் புனிதர்களாக அறிவித்தார்.

1988 – நோர்வேயில் வானூர்தி ஒன்று டோர்காட்டன் மலையுடன் மோதியதி வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 36 பேரும் உயிரிழந்தனர்.

1994 – ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கத்தை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத், பிரெஞ்சு தலைவர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

2001 – சிரியாவுக்கான தனது பயணத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் பள்ளிவாசல் ஒன்றிற்கு சென்றார். பள்ளிவாசலுக்கு சென்ற முதலாவது திருத்தந்தை இவரேயாவார்.

இன்றைய தின பிறப்புகள்

1501 – இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (இ. 1555)

1856 – சிக்மண்ட் பிராய்ட், ஆத்திரிய உளவியலாளர் (இ. 1939)

1861 – மோதிலால் நேரு, இந்திய தேசிய காங்கிரசு தலைவர் (இ. 1931)

1871 – விக்டர் கிரின்யார்டு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (இ. 1935)

1872 – வில்லெம் தெ சிட்டர், டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1934)

1896 – ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட், சுவீடன் இயற்பியலாளர் (இ. 1966)

1904 – ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (இ. 1978)

1918 – சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான், அபுதாபி நகர அமீர், அமீரகத்தின் முதலாவது அரசுத்தலைவர் (இ. 2004)

1942 – லால் தன்ஃகாவ்லா, இந்தியாவின் மிசோரம் மாநில முதலமைச்சர்

1953 – டோனி பிளேர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்

1961 – ஜார்ஜ் குளூனி, அமெரிக்க நடிகர், இயக்குநர்

1963 – பொன்வண்ணன், தமிழகத் திரைப்பட நடிகர்

இன்றைய தின இறப்புகள்

1782 – கிறித்தைன் கிர்ச், செருமனிய வானியலாளர் (பி. 1696)

1859 – அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட், செருமானிய புவியியலாளர், நாடுகாண் பயணி (பி. 1769)

1862 – கென்றி டேவிட் தூரோ, அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1817)

1915 – வாசிலி பாவ்லோவிச் எங்கல்கார்த், உருசிய வானியலாளர் (பி. 1828)

1922 – சாகு மகாராசர், மகாராட்டிரா கோல்காப்பூர் சமத்தான மன்னர் (பி. 1874)

1952 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலிய-டச்சு மருத்துவர், கல்வியாளர் (பி. 1870)

1959 – ராக்னர் நர்க்சு, எசுத்தோனிய-அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1907)

1963 – தியோடர் வான் கார்மன், அங்கேரிய-அமெரிக்கக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1881)

1979 – கார்ல் வில்லெம் ரெய்ன்முத், செருமானிய வானியலாளர் (பி. 1892)

1992 – மார்லீன் டீட்ரிக், செருமானிய-அமெரிக்க நடிகை, பாடகி (பி. 1901)

2008 – அல்லா கெனெரிகோவ்னா மாசேவிச், சோவியத் உருசிய வானியலாளர் (பி. 1918)

2016 – லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், பிரித்தானியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1935)

2021 – பாண்டு, தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1947)

இன்றைய தின சிறப்பு நாள்

மாவீரர் நாள் (காபோன்)

மாவீரர் நாள் (லெபனான், சிரியா)

ஆசிரியர் நாள் (ஜமேக்கா)