கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் அருகே மணிமொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் முதியோர் உதவி தொகை மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான சம்பத்குமார் என்பவர் மணிமொழியிடம் 4500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து மணிமொழி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மணிமொழி சம்பத் குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பத்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்m