கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பெருமாள் நகர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலாயுதம் பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தோரணக்கல்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக கோபாலகிருஷ்ணனின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆனந்தராஜ் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.