அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை சனிக்கிழமை அன்று ஜெயம்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே 18 வயது முதல் 40 வரை உள்ள எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 04329228641 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.