ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்கொத்துக்காடு பகுதியில் சுவாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கோபி-சக்தி சாலையில் காசிபாளையம் வாய்க்கால் மேடு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஈஸ்வரி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சாமிநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.