நகர்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் தூய்மை குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற இருக்கின்றார். மத்திய வீட்டு வசதித்துறை, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறது. இதில் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும் நகர்புற திட்டமிடல் வல்லுனர்கள், நிதி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க இருக்கின்றனர்.