வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 16-ஆம் தேதி திரிபுராவிலும், மேகாலயா நாகலாந்திற்கு இன்றும் (27-ம் தேதியும்) வாக்குப்பதிவு நடைபெற்றது. வருகிற மார்ச் இரண்டாம் தேதி இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின்படி, நாகலாந்து சட்டசபை தொகுதிகளில் உள்ள நான்கு  வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அந்த வகையில் ஜூன்ஹிபோட்டா சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ள நியூ காலனி, சனீஷ்  தொகுதியின் கீழ் பாங்க்ரி வீ டிஷீட், சட்டமன்ற தொகுதியின் கீழ் ஜபோகோ  கிராம வாக்குச்சாவடி மற்றும் தேனாக்கியூ சட்டமன்ற தொகுதி என் கீழ் பாஸ்தோ கிழக்கு பகுதி போன்றவற்றில் காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக நாகலாந்தில் என்டிபிபி பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் எனவும் என்டிடிபி 38 – 48 தொகுதிகளிலும், என்பிஎஃப்3 – 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 – 2 தொகுதிகளிலும், மற்றவை 5 – 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி இருந்தது.