திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், நீங்கள் பார்த்தீர்கள் என்றால்?   ஆஸ்திரேலியா வேர்ல்ட் கப் வின் பண்ணது பிறகு மார்ஸ் என்கின்ற பிளேயர் அந்த கப்பை வைத்து கால் வைத்திருந்தார். உலக கோப்பை மேல் கால் தூக்கி வைத்திருந்தார்.  உலகக்கோப்பை மேல் கால் வைப்பதா ? என நம்ம தேசபக்தர்கள் எல்லாம் கொந்தளித்து விட்டார்கள். அவன் ஜெயித்தவன் எதையும் தூக்கி  வைப்பான்.

இதெல்லாம் என்ன பேச்சு ? நீ தோத்துப் போனாய்…. அது ஒரு ஆட்டம். அந்த ஆட்டத்தை  அவன் நல்லா ஆடினான் அதனால் ஜெயித்தான்….  நம்ம நல்லா ஆடல… நல்லா ஆடுனவன்  ஜெய்த்தான்.  நாம ஜெயிக்க  விரும்பினோம். அனால் அவன் நல்லா ஆடினான் ஜெய்ச்சான். ஜெயித்தவன் காலை  எங்கேயும் தூக்கி வைப்பான். இன்னொன்று ஒரு சாதாரண உலக கோப்பைக்கு மேல கால தூக்கி வைப்பதற்கு இந்த கத்து கத்துறீயே…

ரொம்ப நாள் என்னை காலில் பிறந்தவன் என்று  என்று சொல்லிக் கொண்டே இருந்தாய்… நீ மனிதன் அல்ல…. ஒருத்தன் தலையில் பிறந்தவன், ஒருத்தன் நெஞ்சுல  பிறந்தவன், ஒருத்தன் காலில் பிறந்தவன் என சொல்லிட்டே இருந்த… மனுஷன் காலில் பிறக்கலாமா ? ஆனால் உலக கோப்பை மேல் கால் வைக்கக்கூடாதாம்…. இது தான் சனாதனம் என தெளிவு படுத்தினார்.