கேரளா கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 25 பேர், ஆசிரியர்கள் 8 பேர் இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் உணவகத்தில் அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து மாணவர்கள் 6 பேருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது உணவில் உயிரிழந்த புழுக்கள் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த உணவகத்தை மூடிய அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..