சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கட்சியின் பெயரையும், அதன் சின்னமான வில் அம்பினையும் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் சிவசேனையின் வில் அம்பு சின்னம் திருடப்பட்டு விட்டதாகவும், சின்னத்தைத் திருடியவர்களுக்கு சரியான பாடம் கற்றுத்தர வேண்டும் எனவும் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார். கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்கு முன்பாக மும்பையில் தன் இல்லம் முன்பு திரண்டிருந்த சிவசேனை ஆதரவாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.