உக்ரைனில் நடந்த ராக்கெட் தாக்குதலில் ரஷ்ய படையினர் 63 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 313-ஆம் நாளாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன்  நாட்டின் டோனெட்க்ஸ் என்ற மாகாணத்தில் இருக்கும் மெகிவ்கா என்னும் நகரத்தில் ரஷ்யப்படையினரின் தற்காலிக இராணுவ முகாமில் உக்ரைன் படை தாக்குதல் மேற்கொண்டது.

இதில் ரஷ்யப்படையைச் சேர்ந்த 63 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிம்ரஸ் ராக்கெட் ஏவுதள அமைப்பிலிருந்து ஆறு ராக்கெட்டுகள் ஏவப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யப்படை தெரிவித்திருக்கிறது.