அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரில் மூன்றாம் உலகப்போரை கொண்டுவர வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாகாணத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டில் மனைவியோடு சேர்ந்து புத்தாண்டை கொண்டாடியிருக்கிறார். அதன் பிறகு, அவர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறினார்.

அதன் பிறகு உக்ரைன் போர் பற்றி அவர் தெரிவித்ததாவது, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே நடக்கும் இந்த போர் இந்த வருடத்தில் முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறேன். எனினும், இந்த போரில் மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார்.