ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசாலட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் வேலுமணி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை கடம்பூரில் இருந்து கே.என் பாளையம் நோக்கி சென்ற டிராக்டரில் வேலுமணியும் கார்த்தி என்பவரும் பயணித்தனர். அந்த டிராக்டரை முருகேசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் போன்பாறை அருகே சென்ற போது டிராக்டரின் மெயின் ஆக்சில் கட்டானதாக தெரிகிறது. இதனால் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் கார்த்தியும், முருகேசனம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து கீழே குதிக்க முயன்ற போது டிராக்டருக்கு அடியில் சிக்கி வேலுமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வேலுமணியின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.