திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை, பேருந்து நிலையம், 7 ரோடு சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உலா வந்தது. இதனை பார்த்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்காமல் சிறிது தூரத்திலேயே நின்று விட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். மேலும் காட்டெருமைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.