திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்காரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விநாயகனை நேற்று அதிகாலை 5 மணிக்கு ஒரு வாலிபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த வாலிபர் எனது வீட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இப்பவே எனது வீட்டிற்கு வந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய முடியுமா? முடியாதா? என கேட்டுள்ளார். மேலும் நான் உங்களுக்கு ஓட்டு போட்டுள்ளேன் என அந்த வாலிபர் மிரட்டி பேசியதாக தெரிகிறது. மேலும் அவர் மதுபோதையில் விநாயகனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து மிரட்டல் விடுத்தார்.

இதனை விநாயகம் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து எனது வீட்டில் பிள்ளைகள் படித்து கொண்டிருக்கிறார்கள் தயவுசெய்து சென்று விடுங்கள் என விநாயகம் கூறியும் அந்த நபர் தொடர்ந்து தகராறு செய்துள்ளார். அப்போது விநாயகன் உங்கள் ஊருக்கு நான் ஊராட்சி மன்ற தலைவராக வந்தது எனது குற்றமா? இந்த ஊரில் வாழ்வது குற்றமா? என மிகவும் மனமடைந்து பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.