கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கேரள மக்களின் முக்கிய பண்டியான ஓணம் பண்டிகை முன்னிட்டு வருகிற 4-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்ட பகுதிகளில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில் நல்லமுடி பூஞ்சோலை, கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் எனவும் போக்குவரத்து நெரிசலை தடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.