கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட புதூரில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புக்கு பின்புறம் இருக்கும் கால்வாயில் மலைப்பாம்பு கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வேட்டை தடுப்பு காவலர் பிரியன் சுமார் 10 அடி நீளம் உள்ள அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.