
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், ஈழத்தில், இலங்கையில், தமிழர் பகுதியில் 2009க்கு பிறகு இங்கு என்ன நடந்துட்டு இருக்கு ? இன்னைக்கு முழுக்க சீன் ஆக்கிரமிப்பு….. கச்சத்தீவு வரைக்கும் வந்துட்டாங்க…. நீர்மூழ்கி கப்பல் வந்து போகுது….. இதனால் இந்தியாவுக்கு பேராபது…. இன்னைக்கு பங்களாதேஷில் வந்துட்டான்…. பாகிஸ்தான்ல வந்துட்டான்…. அருணாச்சல பிரதேசத்தில் பாதி புடிச்சுட்டாங்க….
அருணாச்சல பிரதேசம் உள்ள வந்து மேப்லயும் சேர்த்துட்டான். ஒன்னும் பண்ண முடியல. இலங்கையில் இருந்து அடிச்சாங்க. திருகோணமலையில் அம்மான் தோட்டத்தை 99 வருஷத்துக்கு குத்தகைக்கு எடுத்துட்டான். தலைவர் பிரபாகரன் இருந்த வரைக்கும் அமெரிக்காவும் வாழட்டும், முடியல சீனாவும் வாலாட்ட முடியல.
ஒரே ஒரு போர்ட் கூட வர முடியல. கப்பல் வந்தால் பதில் சொல்லணும், அல்லது அடிச்சு தொரத்துச்சு புலி கூட்டம்…. இன்னைக்கு அவன் வந்துட்டான். அங்க இருந்து ரெண்டு குண்டு அடிச்சானா அப்படின்னா…. கல்பாக்கம், இன்னு ஒன்னு கூடங்குளம். இது வெறும கற்பனை அல்ல…. தமிழ்நாடு மட்டுமல்ல, கேரளா, கர்நாடகா வரைக்கும் சமாதி ஆயிடும்.
பார்க்க கூட உள்ளே நுழைய முடியாது. அப்படிப்பட்ட பெரும் அச்சுறுத்தலை தலைவர் பிரபாகரன் இருந்த வரைக்கும் தடுத்து வைத்திருந்தார். இந்துமா கடலுக்கான போட்டி தான் இந்தியாவினுடைய பெரும் பின்னடைவாக… பேரழிவாக வந்து நிற்க போகுது. சீனவும், அமெரிக்காவும் போட்டி போட்டு நிக்கல். சீனா அந்த இடத்தில் முந்தி வந்து உள்ள உட்கார்ந்த நிலையில், நீங்க மறுபடியும் தமிழீழ மண்ணை விடுதலை பெற்ற மண்ணாக நீங்க அறிவிக்கனும் என தெரிவித்தார்.