மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், சென்னையில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை (டிச.8) மேலும் 2 மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் (ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர்) 2 தாலுகாக்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் (செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம்) ஆகிய 6 தாலுகாக்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.