தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நிதியாளர் பதவிகளுக்கான 5 காலிப்பணியிடங்களுக்கு 11.11.2022 ஆம் நாள் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, டிசம்பர் 10 ஆம் நாள் வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தேர்வானது மார்ச் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கணினி வழி தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. www.tnpsc.gov.inமற்றும் www.tnpscexams.in-ல் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.