அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ்-ஐ நியமித்தது, ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி மனோஜ் பாண்டியன் தொடுத்த உரிமையியல் வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரிக்கிறார்.