தமிழகம் முழுவதும் சமீப நாட்களாக வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல், அதீத காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பாதிப்புகளால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.  இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டோர் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.