தமிழகத்தில் குரூப்-4 தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மார்ச் 4ஆம் தேதி இன்று முதல் மார்ச் 6 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என tnpsc தெரிவித்துள்ளது. 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. எழுத்து தேர்வு ஜூன் 9ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.