தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,   ஒரு மழை வருகின்ற சார்ட் படிக்க தெரியல yellow அலெர்ட்டுக்கும், ரெட் அலெர்ட்டுக்கும்  என்ன கொடுக்குறாங்க. very heavy rainfallக்கும் heavy rainfallக்கும் என்ன கொடுக்கிறாங்க ? அது 12 நாள்ல மாறக்கூடிய சக்தி… எப்படி yellow   redஆக மாறும் என்ற விஷயத்தை படிக்க தெரில.  Basic  விஷயம் படிக்க தெரில… அதிகாரிகள் நாலு விஷயத்தை சொன்னால்,  அதை மூளையில் வாங்கி,  கிரகச்சி ஒரு அறிவுரை  கொடுப்பதற்கான நிலை இல்லை.

நீங்க எல்லாமே வேறு வேறு நிறுவனத்தில் பணிபுரியவர்கள். இங்கு வந்திருக்கக்கூடிய நிறைய பேரு சொந்தமாக நிறுவனம் நடத்துறீங்க…. அல்லது நிறுவனத்தில் பணி புரியுறிங்க. எதோ ஒரு வேலை செய்யுறீங்க. நாம் அனைவரிடமும் நான்கு விஷயத்தை சொன்னால், அதை கிரகிச்சு அதுல உண்மையை சொல்வோம்.  எப்படி நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கும்,  உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் ஒரு நாலு விஷயத்தை பிராசஸ் பண்ணி,

உண்மையை சொல்லும் அளவுக்கு திறமை இருக்கு என நீங்க  நினைக்கிறீங்களா ஐயா ? அதனால் குடும்ப ஆட்சி என்பது தமிழகத்தை மொத்தமாக சீரழித்து விட்டது. சிஸ்டம் முழுவதும் கெட்டுப்போய்…. மாநிலத்தினுடைய ஆட்சியில் இருந்து ஆரம்பித்து,  மேயர் ஆட்சியில் உள்ளே வந்து,  கம்ப்ளிட்டா சிஸ்டத்தை கெடுத்து….. இன்னைக்கு தமிழகத்தை பார்த்தீங்கன்னா….  குட்டிச் சுவராக்கி வைத்திருக்கின்றார்கள் என தெரிவித்தார் .